முன்பிணை கோரி மனு தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன்
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) முன் பிணை கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'அரகலய' காலப்பகுதியின் போதான சம்பவமொன்றுடன் தொடர்புடைய வழக்கொன்றில் தாம் கைது செய்யப்பட உள்ளதாகக் கூறி, அவர் முன் பிணை கோரியுள்ளார்.
கோரிக்கை தொடர்பான முடிவு
இந்த கோரிக்கை தொடர்பான முடிவை எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வழங்குவதாக நீதிமன்றம் அறியப்படுத்தியுள்ளது.
இதேவேளை தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடைமுறையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அண்மையில் கோடிட்டுக் காட்டினார்.
முன்னதாக, தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, தென்னகோனை குற்றவாளி என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
அதன்படி, விசாரணை அறிக்கை மீதான விவாதம் 2025 ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
