யாழில் புடவைக்கடை மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
Jaffna
Crime Branch Criminal Investigation Department
Crime
By Thulsi
யாழில் (jaffna) புடவைக்கடை ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவமானது யாழ்ப்பாணம் - நெல்லியடி (Nelliaddy) பகுதியில் உள்ள புடவைக்கடை மீதே இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே, புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்