மீண்டும் உயர்த்தப்படும் பெட்ரோல் விலை - திணறும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது.
அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தானிய நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது.
இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பாகிஸ்தானிடம் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
