விசேட துறைகள் தனித்தனியாக எரிபொருள் இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதி - திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட விசேட துறைகளுக்கு தமக்கு தேவையான எரிபொருள் அளவை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய நேற்று குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் குறிப்பிட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெற்றோலியப் பொருட்கள் விஷேட ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெற்றோலிய இறக்குமதிக்கு முறையாக அடையாளம் காணப்பட்ட துறைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
இதன்படி, பெற்றோலியப் பொருட்கள் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
முழுமையான விபரங்களை பெற இந்த இணைப்பை அழுத்துங்கள்
