நிலத்தின் கீழே பிணங்கள் - பிள்ளையானுக்கு ஆப்பு வைத்த நெருங்கிய சகாக்கள்!
முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (Pillayan) அலுவலகம் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தமை தான் கடந்த சில நாட்களாக பாரிய பேசு பொருளாக காணப்படுகின்றது.
கொழும்பில் (Colombo) இருந்து வந்த சி.ஐ.டி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கடந்த 30 ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, அலுவலகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதான ஒரு செய்தி மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பரவி இருந்தது.
அத்தோடு, அலுவலகத்தின் நிலத்தின் கீழே இரண்டு பிணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன.
இந்தநிலையில், குறித்த சுற்றிவளைப்பில் முழுமையான பிண்ணனி, பிள்ளையானின் கைது நடவடிக்கையின் அடுத்த கட்டம், இந்த விடயத்தில் சிக்கபோகும் பிள்ளையானின் நெருங்கிய சகாக்கள் மற்றும் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஐபிசி தமிழின் செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
