சிறையில் அச்சக பிரிவில் பணியாற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன, சிறையின் அச்சுப் பிரிவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைத்தண்டனை விதிக்கப்படும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் அதன் அச்சுப் பிரிவிற்கே நியமிக்கப்படுகின்றனர்.
14 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கொழும்பு மே தின அணிவகுப்பில் (2014) பங்கேற்ற ஆனமடுவ தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் குழுவினருக்கும், தனது அரசியல் ஆதரவாளர்கள் குழுவினருக்கும் மாரவிலவில் உள்ள ஒரு விடுதியில் விருந்து அளித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவிற்கு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை (ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கப்பட வேண்டும்) விதித்தார்.

2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிலிருந்து 330,000 ரூபா பணத்தை செலவிட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை, குறித்த செயலை செய்வதற்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 8 மணி நேரம் முன்