மேலெழும்பத் தயாரான விமானம் தீடீர் விபத்து - அலறிய பயணிகள்; பெருவில் பயங்கரம்!
தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலைய ஓடு பாதையில் ஏர்பஸ் விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் ஏ320 என் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறப்பதற்கு தயாரான நிலையிலேயே இந்த விமானம் ஓடுபாதையில் நிறுத்தி வைக்ககப்பட்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
A fire truck entered the runway and collided with the LATAM A320 NEO that was taking off at Jorge Chavez airport in Lima, Peru pic.twitter.com/XtIP2Y8KnR
— OlaWaveNews (@WaveOla) November 18, 2022
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவரகையில்,
பெரு நாட்டின் ஏர்பஸ் ஏ320 என்ற விமானமானத்தில் 102 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில், விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்புவதற்காக வேகமாக சென்றுள்ளது.
திடீர் விபத்து
அப்போது திடீரென்று அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. வாகனம் மீது மோதிய வேகத்தில் விமானத்தின் பின்புறம் தீப்பிடித்தது.
இதனால் விமானத்தை விமானிகள் நிறுத்த முயற்சித்தனர். ஓடு பாதையில் விமானம் தீப்பொறிகள் பறந்தபடியும், கரும்புகை வெளியேறியவாறும் பல அடி தூரம் சென்று நின்றது. இதன் போது விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் அலறினார்கள்.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர். அதனையடுத்து விமானத்துக்குள் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விசாரணை
இந்த விபத்தில் தீயணைப்பு படையைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறும்போது, "விமானம் ஓடு பாதையில் புறப்பட்ட போது தீயணைப்பு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.
En desarrollo: Un Airbus A320 de LATAM Airlines impacta con un camión o autobomba de bomberos en el Aeropuerto de #Lima. pic.twitter.com/pRknU5s0pN
— Nicolás Larenas (@n_larenas) November 18, 2022
இந்த விபத்தில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பயணிகள், விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.