இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் கண்டுபிடிப்பு
இலங்கை கிரிக்கட் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக காலைவேளை இடம்பெற்ற இந்த பரபரப்புச் செய்தியினால் அணியின் பயிற்றுவிப்பாளர்களும் வீரர்களும் மிகவும் அச்சமடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் பதில் செயலாளர் கிருசாந்த கபுவத்த தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக விமர்சனம்
பயிற்சியாளர்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பெறும் சம்பளம் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக விமர்சனம் செய்வதால் தாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்டத்தை வெல்ல முடியாது
இவ்வாறான நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பின்னர் ஆட்டத்தை வெல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்