நாட்டை வந்தடைந்த பிரதமர் ஹரிணி
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நாட்டை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இன்று (15) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறும் "பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025" இல் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த11 ஆம் திகதி இரவு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தார்.
பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டார்
இந்த விஜயத்தின் போது, பிரதமர் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் அரச சபையின் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இரு இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சீனாவின் குவாங்சோவிலிருந்து சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL - 881 ரக விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
