அநுராதபுரத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய பிரதமர்

Anuradhapura Anura Kumara Dissanayaka Narendra Modi India
By Sathangani Apr 06, 2025 05:49 AM GMT
Report

புதிய இணைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சில நிமிடங்களுக்கு முன்பு அநுராதபுரம் தொடருந்து நிலையத்தில் தொடருந்து சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார்.

அத்துடன், நவீனமயமாக்கப்பட்ட மஹா - ஓமந்தை தொடருந்து பாதையும் இந்தியப் பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அநுராதபுரத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் | Pm Modi And Anura To Visit Anuradhapura Today

குறித்த நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக சற்றுமுன்னர் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி ஷ்யாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் பிரதம பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

அநுராதபுரத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் | Pm Modi And Anura To Visit Anuradhapura Today

இதற்கிடையில், தனது எக்ஸ் (X) கணக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரம் நகருக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அந்தப் பதிவில் “அநுராதபுரத்தில் உள்ள ஜய ஶ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தேன்“என குறிப்பிட்டிருந்தார்.

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள நரேந்திர மோடி இன்று (06) அநுராதபுரம் (Anuradhapura) ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.

ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தின் பரிசாக நிறுவப்பட்ட மஹவ - அநுராதபுரம் தொடருந்து சமிக்ஞை அமைப்பு மற்றும்  புதுப்பிக்கப்பட்ட மஹவ-ஓமந்தை தொடருந்து மார்க்கமும் உத்தியோகபூர்வமாக இந்தியப் பிரதமரால் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம் தொடர்பில் இந்திய பிரதமரிடம் சனத் ஜெயசூர்யா முன்வைத்த கோரிக்கை

யாழ்ப்பாணம் தொடர்பில் இந்திய பிரதமரிடம் சனத் ஜெயசூர்யா முன்வைத்த கோரிக்கை

விசேட போக்குவரத்துத் திட்டம்

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அநுராதபுரம் விஜயத்தை முன்னிட்டு இன்று அனுராதபுரம் நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் | Pm Modi And Anura To Visit Anuradhapura Today

அதன்படி அனுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து ஸ்ரீ மகா போதி, வைத்தியசாலை சுற்றுவட்டம், ஹரிச்சந்திர மாவத்தை, மாகாண சபை சுற்றுவட்டம், மணிக்கூண்டு சுற்றுவட்டம் மற்றும் குருநாகல் சந்திப்பு வரையிலான வீதிகள் காலை 8.30 மணி முதல் மூடப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ மகா போதிக்கு அருகிலிருந்து அநுராதபுரம் தொடருந்து நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் மற்றும் அனுராதபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து விமானப்படை தளத்திற்குச் செல்லும் வீதிகள் இன்று காலை 11 மணி வரை அவ்வப்போது மூடப்படவுள்ளன.

இந்த வீதிகள் மூடப்படும் போது, ​​மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் திடீரென ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்

தென்னிலங்கையில் திடீரென ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015