யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன்

Sri Lanka Army Sri Lanka Police Jaffna S Shritharan
By Vanan Oct 26, 2023 07:11 AM GMT
Report

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

எதற்கு எடுத்தாலும் இராணுவம்

மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மைய நாட்களில் காவல்துறையினரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம்

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம்

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன் | Police Action In Jaffna District Is Slow Sridharan

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதாவது இராணுவத்தினை யாழில் தொடர்ச்சியாக இங்கே நிலைநாட்டுவதற்காகக் கூட இந்தச் செயற்பாடுகள் அமைந்திருக்கலாம்.

கொழும்பில் அதிபருக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்டப்பகலில் கூடி கேக் வெட்டியவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இன்று வரை 8 பேரை மட்டுமே கைது செய்துள்ளார்கள்.

காவல்துறையினரின் செயற்பாடு 

இதிலிருந்து எமக்கு ஒன்று புரிகின்றது. காவல்துறையினரின் செயற்பாடு மிக மந்தகதியில் உள்ளது.

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன் | Police Action In Jaffna District Is Slow Sridharan

அதாவது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலை நாட்டுவதற்காகவே காவல்துறையினர் இவ்வாறு செயற்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை அதிகாரம்

காவல்துறையினரால் சிவில் நிர்வாகத்தினை திறமையாக செயல்படுத்த முடியவில்லை என கருதினால் காவல்துறை அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள்.

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது


முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா கூட நீண்ட நாட்களாக கோரிக்கையினை முன்வைத்து வருகின்றார்.

காவல்துறையினரால் சிவில் நிர்வாகத்தினை கட்டுப்படுத்தி செயற்படுத்த முடியா விட்டால் அதனை எங்களிடம் தாருங்கள்" என்றார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024