வெடிகுண்டு வீச முயற்சி - காவற்துறையினர் துப்பாக்கிச்சூடு..!
காலி அக்மீமன பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு, நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான இருவரைச் சோதனையிட முயன்ற நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் வீதியில் சென்ற சந்தேகத்திற்கிடமான இருவரைச் சோதனையிடச் சென்ற போது அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெடிகுண்டு வீச முயற்சி
மற்றொரு நபர் காவல்துறை அதிகாரிகள் மீது வெடிகுண்டு வீச முயன்ற நிலையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
சந்தேக நபர் காயமடைந்து சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து 105 T-56 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அக்மீமன காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
