மீண்டும் காவல்துறையின் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோகண?
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண (Ajith Rohana) மீண்டும் காவல்துறையின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekera) மற்றும் காவல்துறைமா அதிபர் சந்தன டி.விக்ரமரத்ன (Chandana D. Wickramaratne) ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் காவல்துறையின் ஊடகப் பேச்சளராக இருந்த இவர் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.
குறித்த ஊடகப்பேச்சாளர் பதவி வெற்றிடமாகிய நிலையில், அப்பதவிக்கு நிஹால் தல்துவ நியமிப்பட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அஜித் ரோகண காவல்துறையின் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.