செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாடியதால் சிக்கிய கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி
பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாடிய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை காவல்துறை செய்தித் தொடர்பாளரான உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் மேற்படி சம்பவம் தொடர்பில், கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் சிரேஷ்ட காவல்துறை பரிசோதகரால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை
அத்தோடு, காவல்துறை சேவையின் நேர்மையையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்காக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றதாகவும், வூட்லர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், நிர்வாகத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது ஊழியர்கள் என்ற முறையில், காவல்துறை அதிகாரிகள் மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் நெறிமுறைத் தரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்