அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு
புதிய இணைப்பு
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, மின் கட்டணத் திருத்தம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இலங்கை மின்சாரச் சபை, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான 13.56% மின்சாரக் கட்டணத் திருத்தம் கோரி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தது.
மாதாந்திர அதிகரிப்பு
PUCSL அறிவித்த மின்சார திருத்தத்தின் கீழ்:
யூனிட்கள் | கட்டண உயர்வு | அதிகரிப்பு |
| 0–30 யூனிட்கள் | கட்டணங்கள் 4.3% உயரும் | ரூ. 15 அதிகரிக்கும். |
| 31 முதல் 60 யூனிட்கள் | கட்டணங்கள் 6.9% உயரும் | ரூ. 45 அதிகரிக்கும். |
| 61 முதல் 90 யூனிட்கள் | கட்டணங்கள் 6.9% உயரும் | ரூ. 120 அதிகரிக்கும். |
| 91 முதல் 120 யூனிட்கள் | கட்டணங்கள் 7.1% உயரும், | ரூ. 420 அதிகரிக்கும். |
| 180 யூனிட்டுகளுக்கு மேற்பட்ட நுகர்வுக்கு | கட்டணங்கள் 25% உயரும், | - |
முதலாம் இணைப்பு
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் குறித்த தனது இறுதி முடிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இன்று (30) பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளது.
மேற்கு மாகாணத்தில் நடைபெற்ற இறுதி அமர்வு உட்பட, நாடு தழுவிய மக்கள் கருத்து கணிப்புகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலத்திற்கான மின்சாரக் கட்டணத்தில் 13.56% உயர்வை கோரி, இலங்கை மின்சாரச் சபை (CEB) பெப்ரவரி 13 அன்று சமர்ப்பித்த ஒரு முன்மொழிவை PUCSL தற்போது ஆய்வு செய்து வருகிறது.
எதிர்பார்க்கப்படும் வருவாய்
தற்போதைய கட்டணங்களின் கீழ் எதிர்பார்க்கப்படும் வருவாய் ரூ. 116.9 பில்லியனாக இருக்கும் நிலையில், ரூ. 15.8 பில்லியன் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்றும், மொத்த விநியோகச் செலவுகள் ரூ. 136.5 பில்லியனாக மதிப்பிடப்படும் என்றும் இலங்கை மின்சாரச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சமர்ப்பிப்பின்படி, முன்மொழியப்பட்ட இந்த உயர்வு அனைத்து நுகர்வோர் பிரிவினருக்கும் ஒரே சீராகப் பொருந்தும் என கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் PUCSL எடுக்கவிருக்கும் முடிவு, முன்மொழியப்பட்ட கட்டண உயர்வு செயல்படுத்தப்படுமா என்பதைத் தீர்மானிக்கும் என்பதுடன், இதுவே 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான அதிகாரப்பூர்வ கட்டண திருத்தமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
2 நாட்கள் முன்