சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்தக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்
சட்டவிரோத கடற்றொழில்களை நிறுத்தக்கோரி முல்லைத்தீவில் இன்று (30) முதல் அமைதி வழி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்துக்கு முன்பாக மாவட்ட கடற்றொழிலாளர்களால் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கடற்றொழில் அமைச்சர் நாளை (31) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு தடைவிதிக்கக்கோரி போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு
குறித்த போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கடற்றொழிலாளர்கள் சார்பில் கலந்துகொண்டிருந்தார்.

இந்தநிலையில், போராட்ட இடத்திற்கு வருகைதந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் போராட்ட கோரிக்கைகளுக்கு அமைச்சர் ஊடாக தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்