தமிழர்பகுதி காணியை அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விரட்டியடிப்பு

Sri Lanka Police Tamils Batticaloa Sri Lanka Police Investigation
By Sumithiran Jan 23, 2025 11:23 AM GMT
Report

மட்டக்களப்பு(batticaloa) திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுக்கழக மைதானத்தை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் வந்து வேலி நாட்ட முயன்ற கொழும்பைச்(colombo) சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அத்தியட்சகர் ஒருவரை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் காவல்துறை அத்தியட்சகராக (எஸ்.பி.பி) கடமையாற்றி 2023 ம் ஆண்டு ஓய்வு பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்தவர் குறித்த பிரதேசத்திலுள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக் கழக மைதானமாக பயன்படுத்திவரும் ஒருபகுதியை இன்று பகல் 11.00 மணியளவில் ஆட்களுடன் வந்து கட்டைகள் கொண்டு அடைக்க முற்பட்டார்.

விளையாட்டு மைதான காணி 

இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இது விளையாட்டு மைதான காணி இதனை அடைக்க விடமுடியாது என தெரிவித்து அடைக்க விடாது தடுத்ததையடுத்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

தமிழர்பகுதி காணியை அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விரட்டியடிப்பு | Police Officer Tried To Seize Tamil Owned Land

இதன் போது ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தான் 2023 ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து 15 பேச் காணியை சட்ட ரீதியாக சட்டத்தரணி ஊடாக வாங்கியுள்ளதாகவும் தன்னிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் உள்ளதாக காட்டி தனது காணியை அடைக்க விடாது தடுத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

சாணக்கியனுக்கு வழக்கு தொடர்ந்து பிள்ளையான் விட்ட தவறு: நீதிமன்ற வழங்கிய அதிரடி உத்தரவு!

சாணக்கியனுக்கு வழக்கு தொடர்ந்து பிள்ளையான் விட்ட தவறு: நீதிமன்ற வழங்கிய அதிரடி உத்தரவு!

சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளர்

இதனையடுத்து பொதுமக்கள் குறித்த காணி கடந்த 1895 ம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும் இது அரச காணி எனவும் இவர் ஒரு காவல்துறை அதிகாரி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளர். இவரைப் போல கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் ஆவணங்களை கொண்டுவந்து இது தனது காணி என சொந்தம் கொண்டாடிய நிலையில் அவரை தடுத்ததையடுத்து அவர் போனவர் போனவர்தான் வரவில்லை.

தமிழர்பகுதி காணியை அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விரட்டியடிப்பு | Police Officer Tried To Seize Tamil Owned Land

அவ்வாறு இந்த மைதானத்தில் உள்ள காணியை அடைக்கவிடாது தடுத்தபோது காவல்துறை அதிகாரி இந்த மைதான காணி 10 பேருக்கு இருப்பதாகவும் இதில் 15 பேச் காணியை தான் ஒருவரிடம் வாங்கியதாகவும் தனது 15 பேச் காணியை தருமாறும் தான் மைதானத்தை புனரமைத்து தருவாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் திருமண வயது எல்லை குறித்து வெளியான தகவல்

இலங்கையில் திருமண வயது எல்லை குறித்து வெளியான தகவல்

போலி ஆவணங்கள்

இவர் என்ன காரணத்துக்காக மைதானத்தை புனரமைத்து தரவேண்டும். நாங்கள் குறித்த காணியை விற்பனை செய்தவர் யார் அவரை வரவழையுங்கள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் யாவும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து வேலி அடைக்கவிடாது தடுத்தோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தமிழர்பகுதி காணியை அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விரட்டியடிப்பு | Police Officer Tried To Seize Tamil Owned Land

தொடர்ந்தும் மக்கள் குறித்த காணிக்கு சொந்தம் கொண்டாடிய காவல்துறை அதிகாரியை வேலியடைக்க விடாது தடுத்தனர். இதனையடுத்து குறித்த காவல்துறை அதிகாரி தடுத்த மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஆட்களுடன் வெளியேறிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மட்டு தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருளில் இடம்பெற்ற பாரிய கலப்படம் அம்பலம்

எரிபொருளில் இடம்பெற்ற பாரிய கலப்படம் அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026