மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு
Sri Lanka Police Investigation
Gun Shooting
Arrest
By Sumithiran
பொரல்ல சஹஸ்புரா பகுதியில் பொறுப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (02) இரவு நடந்துள்ளது, அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தப்பிச் சென்றவரும் கைது
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றொரு நபர் தப்பிச் சென்று பின்னர் வெயங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரிடம் 2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |