இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் : மறுப்பு அறிக்கை விடும் காவல்துறை

Sri Lanka Army Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Raghav Aug 11, 2025 05:52 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம், ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “07.08.2025 ஆந் திகதியன்று, முல்லைத்தீவு காவல்துறை அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட ஒட்டுச்சுட்டான் காவல் நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12வது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...!.சுமந்திரனின் அவசர கோரிக்கை

முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...!.சுமந்திரனின் அவசர கோரிக்கை

காவல்துறை விசாரணை

இதன் போது, 07.08.2025 ஆந் திகதியன்று இரவு வேளையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்லதற்காக அதன் முகாம் வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த ஐந்து பேரை விரட்டியடிப்பதற்காக முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தனர். 

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் : மறுப்பு அறிக்கை விடும் காவல்துறை | Police Special Report On The Death Youth Ottusudan

அதில் தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் முத்தையன்கட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கமைய காவல்துறை விஷேட குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேற்படி நபர்கள் முகாம் வளாகத்தினுள் நுழைந்தபோது, முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் அவர்களைக் கண்டு விரட்டியடிக்க முற்பட்ட போது, இதன் விளைவாக, உள்ளே நுழைந்தவர்கள் தாக்கப்பட்டது தெரியவந்ததன் காரணமாக சிப்பாய் ஒருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், முகாமுக்குள் நுழைந்து திருட்டுச் சம்பவத்தை மேற்கொள்வதற்காக இந்தக் குழுவுக்கு உதவிய மேலும் இரண்டு சிப்பாய்களும் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மணி விவகாரத்தில் அரச தலையீடு எதுவுமில்லை : வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

செம்மணி விவகாரத்தில் அரச தலையீடு எதுவுமில்லை : வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

முல்லைத்தீவு நீதிவான்

அவர்கள் மூவரையும் 09.08.2025 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று சந்தேகநபர்களையும் 19.08.2025 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் : மறுப்பு அறிக்கை விடும் காவல்துறை | Police Special Report On The Death Youth Ottusudan

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் எந்தவித செல்வாக்கும் இல்லாமல், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், ஒட்டுசுட்டான் காவல்துறையினரும், காவல்துறைவிசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : கொழும்புக்கு அனுப்பப்படவுள்ள உடற்கூற்று மாதிரிகள்

இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : கொழும்புக்கு அனுப்பப்படவுள்ள உடற்கூற்று மாதிரிகள்

உலகையே அதிரவைக்கும் தங்க களஞ்சியம் : உகாண்டாவுக்கு புதிய பொற்காலம்

உலகையே அதிரவைக்கும் தங்க களஞ்சியம் : உகாண்டாவுக்கு புதிய பொற்காலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026