யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய காவல்துறையினர்

Jaffna Sri Lanka Journalists In Sri Lanka Law and Order
By Shalini Balachandran Mar 03, 2025 08:06 AM GMT
Report

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இளவாலை காவல் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்றையதினம் (02) 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.

கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் குதிக்கவுள்ள சுகாதார தொழிற் சங்கங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

போராட்டத்தில் குதிக்கவுள்ள சுகாதார தொழிற் சங்கங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொதியிடும் நடவடிக்கைகள்

இதையடுத்து, கஞ்சா இளவாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கஞ்சாவை பொதியிடும் நடவடிக்கைகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக இரண்டு ஊடகவியலாளர்கள் இளவாலை காவல் நிலையத்திற்கு சென்று தாங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய காவல்துறையினர் | Police Threaten Journalists Jaffna

இதையடுத்து, செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரிய நிலையில், இளவாலை காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு உடனடியாக பதில் கூறாமல் அசண்டயீனமாக செயற்பட்டுள்ளார்.

பின்னர் விசேட அதிரடிப்படையினர் சம்மதித்தால் செய்தி சேகரிப்பில் ஈடுபடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்பு விசேட அதிரடிப்படையினரிடம் சென்ற ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்தி விட்டு செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

பூதாகரமான எரிபொருள் பிரச்சினை: ஆரம்பமாகியது சிஐடி விசாரணை!

பூதாகரமான எரிபொருள் பிரச்சினை: ஆரம்பமாகியது சிஐடி விசாரணை!

காவல்துறை உத்தியோகத்தர்

கஞ்சாவை பொதியிட்ட பின்னர் காணொளி எடுக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்த நிலையில், அதற்கு சம்மதம் தெரிவித்த ஊடகவியலாளர்கள் வெளியே காத்திருந்தனர்.

இதன்போது இளவாலை காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து ஊடகவியலாளர்களை பார்த்து நீங்கள் யார் ? ஏன் வந்தீர்கள் என வினவியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனே குறித்த இளவாலை காவல்துறை உத்தியோகத்தர் ஊடகவியலாளர்களை மிரட்டும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய காவல்துறையினர் | Police Threaten Journalists Jaffna

ஊடகவியலாளர்களை கைப்பேசி பாவனை செய்ய வேண்டாம் என்றும், யாருடனும் அழைப்பு எடுத்து பேசக்கூடாது என்றும், கைப்பேசிகளை உள்ளே வைக்குமாறும் மிரட்டியுள்ளார்.

அதற்கு குறித்த ஊடகவியலாளர்கள், தாங்கள் தனிப்பட்ட விடயத்துக்கு கைப்பேசியை பாவிப்பதாக கூறிய பின்னரும் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீண்டும் அவர்களை மிரட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களை செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க கூடாது என்பது போலவே குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் செயற்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அநாகரிகமான செயற்பாடு

இதன்போது காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிகமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊடகவியலாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இளவாலை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் கசிப்பு உள்ளிட்ட பல்வேறு போதைவஸ்துகள் விற்பனை மற்றும் பாவனை இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் காவல்துறையினர் உரிய கவனம் செலுத்தாமல் இருக்கும்போது இராணுவத்தினரும் மற்றும் விசேட அதிரடிப்படையினருமே பெரும்பாலான கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய காவல்துறையினர் | Police Threaten Journalists Jaffna

காவல்துறையினரும் இவ்வாறான குற்றச்செயல்கள் புரிபவர்களுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றனவா என மக்கள் ஏற்கனவே பல தடவைகள் சந்தேகம் வெளியிட்டு வந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்திய செயற்பாடானது காவல்துறையினர் தங்களது பிழைகளை மூடிமறைக்க முற்படுகின்றனரா ? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வேறு இடத்தில் இருந்து வருகின்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் இவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்படும் போது, குறித்த பகுதியில் நிலையாக உள்ள காவல் நிலையத்தில் கடமை புரியும் காவல்துறை அதிகாரிகளும், காவல்துறை உத்தியோகத்தர்களும் கைதுகளை முன்னெடுக்காது உள்ளமை மக்கள் மத்தியில் காவல்துறையினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் : சடுதியாக குறைந்த விலை

தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் : சடுதியாக குறைந்த விலை

செய்திகள் - கஜந்தன்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024