பெங்களூருவிலிருந்து வருகை தந்த தொழிலதிபர் கட்டுநாயக்கவில் சுற்றிவளைப்பு...!
Bandaranaike International Airport
Sri Lanka
Law and Order
Inspector General of Police
By Shalini Balachandran
வெளிநாட்டு நாணயங்களுடன் கட்டுநாயக்கவில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வருகை தந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், கண்டி, அக்குரணைப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த 48,900 யூரோ (EUR), 14,000 அமெரிக்க டொலர் (US$) மற்றும் 26,650 இந்திய ரூபாய் (INR) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மொத்த நாணயங்களின் பெறுமதி சுமார் 24.09 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி