சாவகச்சேரி வைத்தியசாலை முன் பதற்றம்: சற்றுமுன் ஒருவர் கைது - மக்கள் செல்லத்தடை
வைத்தியர் அர்ச்சுனா விடுப்பில் கொழும்பு (colombo) சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலைக்கு வருகை செய்துள்ளார்.
இதனால் சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) வளாகத்திற்கு முன்பாக இன்று (15.7.2024) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

வைத்தியர் ரஜீவை வெளியேற்றி விட்டு நாற்காலியில் அமர்ந்த அர்ச்சுனா : சாவகச்சேரி வைத்தியசாலையில் அதிரடி
மக்கள் விசனம்
இந்நிலையில், அவரை வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடினர்.
குறித்த பகுதிக்குள் காரணம் ஏதுமின்றி எவர் ஒருவரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்றும், தங்களது கட்டுப்பாட்டில் சாவகச்சேரி வைத்தியசாலையை காவல்துறையினர் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனக்கு மட்டுமல்ல...25 வைத்தியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைத்தியர் அர்ச்சுனா வேண்டுகோள்

Exclusive - எனது அடுத்தக்கட்ட நகர்வுகளை கேட்டு அச்சமடைந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் - பகிரங்கப்படுத்தும் வைத்தியர் அர்ச்சுனா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்