இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான நபர் சுட்டுகொலை தென்னிலங்கையில் சம்பவம்
துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் பலி
புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான உதவியளார் எனவும், அவர் பல்வேறு குற்ற செயல்களுக்கு தொடர்புடையவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்னர்.
உயிரிழந்தவர் 40 வயதுடைய இஹல வித்தானகே ஜோஸப் என்பவர் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி
இன்று அதிகாலை 4 மணியளவில் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் காவல்துறையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்யச் சென்றபோது, அவர் உந்துருளியில் தப்பிச் சென்றதுடன், காவல்துறையினர் உந்துருளியை துரத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், சந்தேக நபர்உந்துருளியை நிறுத்தி காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதிய நிலையில் பதிலுக்கு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.