வருட இறுதியில் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகும் அரசியல் பிரமுகர்கள்
வருட இறுதியில் நீண்ட விடுமுறையை கழிப்பதற்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் மட்டுமின்றி, அரச உயர் அதிகாரிகளும் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இவர்களில் சிலரது குடும்பங்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்ற காரணத்தால் விடுமுறையை கழிப்பதற்காக ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளை தெரிவு செய்துள்ளனர்
இந்த நாடுகளில் வருட இறுதி விடுமுறை காலம் என்பதனால் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் இவ்வாறு வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன் அது தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்தன. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதியே நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.