போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் திறந்து வைப்பு
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகள் அணுகக்கூடிய வகையில் அலுவலகங்களை திறக்கவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்திருந்தார்.
இதன்போது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் போராளி சிவகுமாரன், விடுதலைப் புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், தியாகி திலீபன், தியாகி அன்னை பூபதி உள்ளிட்டவர்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழ்குமரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்