கொழும்பில் கடத்தி கொல்லப்பட்ட சீன பிரஜை...! நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடவடிக்கை
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களும் அடையாள அணிவகுப்பிற்கு (Identification Parade) முன்நிறுத்தப்படவுள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று (27-07-2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
இச்சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களும் கணினி குற்றங்களில் (Computer Crimes) ஈடுபடும் கும்பலொன்றின் உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு துறைமுக நகரப் பாலத்தின் மீது மூன்று சீன பிரஜைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ன் ஒன்றில் வந்த மேலும் சில சீனர்கள் அவர்களைத் தாக்கி கால்களைக் கட்டி வைத்து, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து கடத்தப்பட்ட சீனரின் சடலம் எஹெலியகொட கரதன பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறை விசாரணை
ஹாவோ சோங் (Hao Song) என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
கத்திக்குத்துக்களால் உடலின் உட்புற உறுப்புகளுக்கு ஏற்பட்ட பலத்த சேதமே மரணத்திற்குச் முதன்மை காரணம் எனப் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட ஹாவோ சோங் என்பவரும் கணினி சார் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவரது சடலத்தைச் சீனத் தூதரகத்தின் ஊடாகச் சீனாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையனர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |