பிரபாகரனின் உருவச்சிலை! அநுர அரசாங்கத்துக்கு சவால் விடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
வடக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவச்சிலை மற்றும் வடக்கு மாகாண சபை தேர்தல் ஆகியவை வடக்கு மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகிஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயம் மாகாண சபை தேர்தலை நடத்து வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பலம்
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “எமது எதிர்பார்ப்பு தேர்தல் நடந்தால் அரசாங்கத்தின் பலம் தெரியவரும் என்பதே.
உள்ளுராட்சி தேர்தலில் அரசாங்கத்தின் பெரும்பான்மை இழக்கப்பட்டது. அவர்களின் 23 இலட்சம் வாக்குகள் இல்லாமலாக்கப்பட்டது.
ஆகையால் மாகாண சபை தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின உண்மை நிலவரம் தெரியவரும்.
அத்தோடு அரசாங்கம் பிரிவினைவாதம் மற்றும் வாக்குறுதிகள் மீறல், முறையான பொது பாதுகாப்பை வழங்க தவறியுள்ளது.
இந்நிலையில் இதற்கு பாடம் புகட்டுவதற்கு தேர்தல் ஒன்றே சரியான வழியாகும்” என கூறியுள்ளார்.
