பிரசன்ன ரணவீரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று (07) மஹர நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையிலேயே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மூவர் விளக்கமறியலில்
இந்நிலையில் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் (Mervyn Silva) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்குடன் தொடர்புடைய மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
