முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

President of Sri lanka Northern Province of Sri Lanka Preschool Children National People's Power - NPP
By Sathangani Feb 28, 2025 06:36 AM GMT
Report

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மானிப்பாய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளமானது வலயக் கல்வி அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையான 6 ஆயிரம் ரூபாவாக மட்டுமே காணப்படுகின்றது.

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை...! சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை...! சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி

வடக்கு மாகாண சபை

2013 வடக்கு மாகாண சபை அமைந்த பின் அப்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த பா.கஜதீபன், போன்றோரின் முயற்சியாலும் அப்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜாவின் ஒப்புதலாலுமே அது கூட சாத்தியப்பட்டது.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Pre School Teachers Salary Allowances Increase

அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் ஆசிரியர் ஒருவருக்கு 30,000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை நிரந்தர சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதனை வடக்கு மாகாண சபையின் கீழ் எடுக்க நடவடிக்கை எடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. இன்றும் முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இது நடைமுறையிலுள்ளது.

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

6000 ரூபா உதவித்தொகை

மேலும், 2018இன் பின்னர் வடக்கு மாகாண சபை பதவி நிறைவிற்கு பின் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றால் நடாத்தப்படும் முன்பள்ளிகளில் நிரந்தர நியமனமுள்ள, போட்டிப் பரீட்சை மூலம் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற விதிகளுக்கு உட்பட கூடிய முன்பள்ளி ஆசிரியர்களும் 30,000 ரூபாவிற்கு உட்பட்ட சம்பளத்துடன் வடக்கு மாகாண சபையால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Pre School Teachers Salary Allowances Increase

இருந்த போதும் பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் வெறும் 6000 ரூபா உதவித்தொகை மட்டுமே வாழ்வாதாரமாக பெறுகின்ற இடரான பொருளாதார நிலையிலேயே கடமையாற்றி வருகின்றனார்.

இது மிகவும் பாதிப்பான நிலையாகும் என்பதுடன் முன்பள்ளி ஆசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

நாட்டை வந்தடைந்த வாகனங்கள் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

நாட்டை வந்தடைந்த வாகனங்கள் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பலத்த எதிர்பார்ப்புக்களோடு வடக்கு மாகாண தமிழ்மக்கள் வாக்களித்து 05 ஆசனங்களை வழங்கியுள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Pre School Teachers Salary Allowances Increase

இந்தச் சூழலில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாகவுள்ள வடக்கு மாகாண ஆளுநர் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி தற்போதைய பிரதமரே கல்வி அமைச்சராகவும் உள்ள காரணத்தினால் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதன் மூலம் வடக்கு மாகாணத்திலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகள் உட்பட அனைத்து விதமான முன்பள்ளிகளையும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பள்ளிகளாக உள்வாங்கிட நடவடிக்கை எடுத்து அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும், சம்பள அதிகரிப்பினை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்‌சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி

ராஜபக்‌சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024