அனுதாபத்திற்காக பதவி விலகுவதாக கூறும் ஜனாதிபதி அநுர! மரிக்கார் குற்றச்சாட்டு
அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று (16) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 14,000 மில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், சட்டவிரோதமான முறையில் சுமார் 300 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் அனுதாபதம்
மேலும், திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கணிசமாகக் குறைத்து, பொய் வாக்குறுதிகள் மற்றும் நிறைவேற்ற முடியாத கனவுகளைக் காட்டி அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தியுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய காரணங்களால் ஜனாதிபதிக்கு பொதுமக்களிடமிருந்து எந்தவித அனுதாபமும் கிடைக்காது என்றும் சாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்