அடுத்த வாரம் இந்தியா செல்லும் ரணில் - இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா நடத்தும் "வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாட்டில்" சிறிலங்கா அதிபர் மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 20 அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு நாடுகள்
அண்டை நாடுகளின் தலைவர்கள் தவிர, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல் தலைவர்கள் மற்றும் ஆசிய உறுப்பு நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் தலைவர்கள், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் குறித்த மாநாட்டில் எமிரேட்ஸ் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
