வெளிநாட்டுத் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பில் ரணில்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் போது (COP 27) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று எகிப்துக்கு சென்றார்.

இதன்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஸ்லோவேனியா குடியரசின் அதிபருடன் சந்திப்பு

அதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் அதிபர் போரட் பாகோருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்றும் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஸ்லோவேனியா அதிபர் மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக சிறிலங்கா அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.