வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன் - பகிரங்க அறிவிப்பு விடுத்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து எதிர்வரும் ஆண்டு அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க எதிர்கட்சியான குடியரசு கட்சி இப்போதே பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.
கடந்த முறை குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டொனால் ட்ரம்ப், இந்த முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆதரவாளர்களின் கருத்து
ஆனால் அவரது பிரசாரம் சூடுபிடிக்கவில்லை என்றும், மிக மெதுவாகவே அவரது பிரசாரம் நடப்பதாகவும் ஆதரவாளர்களின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பில் டொனால் ட்ரம்ப் கொலம்பியாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதில் அவர் உரையாற்றும்போது, தான் மிகவும் கோபமாக இருப்பதாக கூறினார்.
வெள்ளை மாளிகையை மீட்டெடுக்கும் முயற்சி
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை மீட்டெடுக்கும் முயற்சியில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.அதற்கான பிரசாரத்தில் இறங்கி விட்டேன் எனவும் தெரிவித்தார்.
அவரது பேச்சு மூலம் வருகிற தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.