அதிபர் தேர்தல் திகதி குறித்து நீதி அமைச்சர் தகவல்
அதிபர் தேர்தல் நடைபெறுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
ஹட்டனில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
இம்முறை அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party) தீர்மானம் மிக்க வலுவான கட்சியாக செயற்படும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் அதிபர் தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        