மீண்டும் அதிபராக ரணிலை தெரிவு செய்ய வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற எம்.பி

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Election
By Shadhu Shanker May 31, 2024 01:23 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

“நாட்டை மேலும் அபிவிருத்திச் செய்ய அதிபர் தேர்தலை நடத்தி, ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) மீண்டும் அதிபராக தெரிவு செய்ய வேண்டும்”என ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க(Ashu Marasinghe )தெரிவித்துள்ளார்.

மேலும், இல்லையெனில், அதிபர் தேர்தலைக் குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு அதிபர் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்று நாட்டை முன்னேற்றுவதற்கு ரணிலுக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளியானது 2023 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

வெளியானது 2023 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

அதிபர் தேர்தல்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் நடவடிக்கைகளை எடுத்துவந்தார்.

presidensial election

அவர் எடுத்த கஷ்டமான தீர்மானங்கள் காரணமாகவே குறுகிய காலத்தில் யாரும் எதிர்பார்க்காதவகையில் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுவந்த கஷ்டமும் தற்போது இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களே அதற்கு காரணமாகும்.

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை அந்த நிலையிலிருந்து முழுமையாக மீட்பதற்கு இந்த அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

ஆளுங்கட்சியில் முக்கிய அமைச்சு பதவி: சவால் விடும் விமல் வீரவன்ச

ஆளுங்கட்சியில் முக்கிய அமைச்சு பதவி: சவால் விடும் விமல் வீரவன்ச

பொருளாதார ரீதியில் நெருக்கடி 

அந்த வேலைத்திட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்பட்டால், மீண்டும் நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

மீண்டும் அதிபராக ரணிலை தெரிவு செய்ய வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற எம்.பி | Presidential Election 2024 Ranil Political Crisis

இவ்வாறான நிலையில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் அரச இயந்திரங்கள் முறையாக இயங்காது. அபிவிருத்தி திட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்படும்.

அதனால்தான் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு ஒரு யோசனையை முன்வைத்தார்.

அதில் தவறு எதுவும் இல்லை. அவர் இந்த யோசனையை எதிர்க்கட்சிக்கே முன்வைத்தார். ஏனெனில் இதுதொடர்பாக நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும்.

கனடாவிலிருந்து புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கனடாவிலிருந்து புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

மீண்டும் அதிபராக ரணில்

அவ்வாறு இல்லாமல் தேர்தலை ஒத்திவைக்குமாறு அவர் தெரிவிக்கவில்லை. ரங்கே பண்டாரவின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் ஏன் பதற்றமடைய வேண்டும் என கேட்கிறோம்.

மீண்டும் அதிபராக ரணிலை தெரிவு செய்ய வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற எம்.பி | Presidential Election 2024 Ranil Political Crisis

ஆரம்பித்திருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கே அது தொடர்பான ஞானம் இருக்கிறது.

புதிதாக வேறு யாரும் அதிகாரத்துக்கு வந்தால் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போகும். எனவே நாட்டை அபிவிருத்தி செய்து முன்னுக்கு கொண்டுசெல்ல இரண்டு தீர்வுகளே இருக்கின்றன.

அதாவது, அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி, அதில் நாட்டு மக்கள் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராகத் தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க

அல்லது அதிபர் தேர்தலைக் குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு அதிபர் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்று நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும்.

மீண்டும் அதிபராக ரணிலை தெரிவு செய்ய வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற எம்.பி | Presidential Election 2024 Ranil Political Crisis

இந்த இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த தீர்மானங்களை எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போகும் என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025