அடுத்த வருட தொடக்கத்தில் அதிபர் தேர்தல் - கச்சிதமாக காய் நகர்த்தும் ரணில்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கக் கட்சித் தலைவர்கள் மற்றும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களை கடந்த திங்கட்கிழமை அதிபர் செயலகத்திற்கு அழைத்ததாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
பாதகமான நிலையில் இருந்த பொருளாதாரம்
பாதகமான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிபர், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அதனை நேர்ப்பெறுமதிக்குள் கொண்டு வருமாறும் அமைச்சரவை மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் விடுத்த வேண்டுகோள்
மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கிராமத்திற்குச் சென்று எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கான பின்னணியை தயார் செய்யுமாறும் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
