இரு மடங்காக அதிகரிக்கவுள்ள விலைகள்! நாட்டு மக்களுக்கு வெளியாகிய அறிவித்தல்
விலைகள்
அதிகரிக்கப்பட்ட நீர்க்கட்டணங்கள் தொடர்பான மாதாந்த கட்டணங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினரின் நீர் கட்டணம் 200% முதல் 250% வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து இரசாயனப் பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதுடன், பழ பானங்கள் மற்றும் தயிர் பானங்களின் விலை 50 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.
இது தவிர, வாகன சுத்திகரிப்புக்கு 50% முதல் 100% வரை கட்டணம் உயர்த்தப்படும் என்றும், கடந்த மாதம் மின்கட்டணம் பெருமளவில் உயர்ந்ததால் தொழில்துறையினர் மிகவும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 7,000 ரூபா குடிநீர்க் கட்டணமாகப் பெற்ற வர்த்தகர்கள் 15,000 ரூபாவும், 12,000 ரூபா குடிநீர்க் கட்டணமாகப் பெற்ற தொழில் அதிபர்கள் 25,000 ரூபா நீர்க் கட்டணமாக பாரியளவிலான கட்டணமாகப் பெறுவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,