“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டி - இன்றைய போட்டிகள் நிறைவு
யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது நாள் (28.08.2022) போட்டி ஆரம்பமாகியுள்ளது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 நடத்தப்படுகின்றது.
நேற்று சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி - 4 ( 28.08.2022 )
“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் (இருபதுக்கு - இருபது) இரண்டாம் நாள் போட்டியில் முதலாவது ஆட்டமாக யாழ் சீட்டாஸ் அணியும் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் சீட்டாஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சீட்டாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17.4 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 10 விக்கட்கள் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 118 ஓட்டங்களை பெற்றது.
இதன் மூலம் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றியை தனதாக்கியது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியின் ஜி.ஜெரிக்தூசன் தெரிவானார்.
போட்டி - 5 ( 28.08.2022 )
இரண்டாம் நாள் போட்டியில் இரண்டாவது ஆட்டமாக சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணியும் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 144 ஓட்டங்களை பெற்றது.
இதன் மூலம் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி 21 ஓட்டங்கள் மூலம் வெற்றியை தனதாக்கியது.
போட்டியின் ஆட்டநாயகனாக அபினாஷ் தெரிவானார்.
இதற்கமைய இன்றைய போட்டியில் முதலாவது ஆட்டமாக யாழ் சீட்டாஸ் எதிர் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதனையடுத்து இரண்டாவது ஆட்டம் சுண்டிக்குளி ஈகிள்ஸ் எதிர் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது .
நேற்றைய ஆட்ட நிலவரம்
நேற்று இடம்பெற்ற முதலாவது நாள் ஆட்டத்தின் போது சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியும் அரியாலை கில்லாடிகள் 100 அணியும் மோதிக் கொண்டன, இதில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.
இரண்டாவது போட்டியில் சுழிபுரம் றைனோஸ் அணியும் றைசிங் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன, இதில் றைசிங் ஸ்ரார்ஸ் அணி 67 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.
மூன்றாவது போட்டியில் கிரிக்கெட் நைட்ஸ் அணியும் ஜப்னா றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன, இதில் கிரிக்கெட் நைட்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.
















