உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : இறுதிக்கட்டத்தை நெருங்கிய வாக்குச்சீட்டு அச்சிடும் பணி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் (Department of Government Printing) தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிப்பு
மேலும், உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்புகள் மற்றும் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த நாட்களில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 7 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அவற்றில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான 6 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பான ஒரு முறைப்பாடும் உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
