மன்னார் மேடை பேச்சால் சர்ச்சையில் அநுர: இரண்டே நாட்களில் இறுதி முடிவு!
ஜனாதிபதியின் அறிக்கை தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முடிவொன்றை எடுக்க தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21 ஆம் திகதி கூடவுள்ளது.
அண்மையில் மன்னார் பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்து தேர்தல் சட்டதை மீறும் வகையில் உள்ளதாக கூறப்பட்டது.
அதன்போது, ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கும் தேசிய மக்கள் கட்சி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகாரத்தை இழக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதி முடிவு
இந்த நிலையில், ஜனாதிபதியின் குறித்த அறிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக அதன் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி கூடவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் முறைப்பாடுகள் சமர்பிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
