பனை ஓலைகளுடன் போராட்டத்தில் குதித்த கல்முனை மக்கள்!

Batticaloa Sri Lankan Peoples SL Protest
By Laksi Apr 17, 2024 03:21 PM GMT
Report

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகம் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (17) 24 ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலின் கொடூரத்திலும் நிழல் கூடாரம் அமைக்கத் தடை விதித்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக தீர்விற்கான தமது கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் தம்மைக் காக்க பனை ஓலைகளைத் தாங்கி போராடி வருகின்றனர்.

கொள்ளையர்களின் கைவரிசை: குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை

கொள்ளையர்களின் கைவரிசை: குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை

நிர்வாக அடக்குமுறை

பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

பனை ஓலைகளுடன் போராட்டத்தில் குதித்த கல்முனை மக்கள்! | Protest In Batticaloa Srilanka Against Government

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறலுக்குமான எதிர்ப்புப் போராட்டம், குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 ஆம் ஆண்டுகளில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டதை தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் பொதுமக்கள் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொது வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாஸ..! முடிவுக்காக காத்திருக்கும் மகா சங்கத்தினர்

பொது வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாஸ..! முடிவுக்காக காத்திருக்கும் மகா சங்கத்தினர்

போலி வாக்குறுதிகள்

எனினும், ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்ததாக கூறியுள்ளனர்.

பனை ஓலைகளுடன் போராட்டத்தில் குதித்த கல்முனை மக்கள்! | Protest In Batticaloa Srilanka Against Government

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளையும் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் தமக்கான பதில் கிடைக்கும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பனை ஓலைகளுடன் போராட்டத்தில் குதித்த கல்முனை மக்கள்! | Protest In Batticaloa Srilanka Against Government

நாட்டின் பொருளாதாரம் உறுதி நிலையை அடைந்துள்ளது : செஹான் சேமசிங்க

நாட்டின் பொருளாதாரம் உறுதி நிலையை அடைந்துள்ளது : செஹான் சேமசிங்க

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025