பனை ஓலைகளுடன் போராட்டத்தில் குதித்த கல்முனை மக்கள்!

Batticaloa Sri Lankan Peoples SL Protest
By Laksi Apr 17, 2024 03:21 PM GMT
Report

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகம் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (17) 24 ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலின் கொடூரத்திலும் நிழல் கூடாரம் அமைக்கத் தடை விதித்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக தீர்விற்கான தமது கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் தம்மைக் காக்க பனை ஓலைகளைத் தாங்கி போராடி வருகின்றனர்.

கொள்ளையர்களின் கைவரிசை: குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை

கொள்ளையர்களின் கைவரிசை: குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை

நிர்வாக அடக்குமுறை

பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

பனை ஓலைகளுடன் போராட்டத்தில் குதித்த கல்முனை மக்கள்! | Protest In Batticaloa Srilanka Against Government

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறலுக்குமான எதிர்ப்புப் போராட்டம், குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 ஆம் ஆண்டுகளில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டதை தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் பொதுமக்கள் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொது வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாஸ..! முடிவுக்காக காத்திருக்கும் மகா சங்கத்தினர்

பொது வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாஸ..! முடிவுக்காக காத்திருக்கும் மகா சங்கத்தினர்

போலி வாக்குறுதிகள்

எனினும், ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்ததாக கூறியுள்ளனர்.

பனை ஓலைகளுடன் போராட்டத்தில் குதித்த கல்முனை மக்கள்! | Protest In Batticaloa Srilanka Against Government

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளையும் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் தமக்கான பதில் கிடைக்கும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பனை ஓலைகளுடன் போராட்டத்தில் குதித்த கல்முனை மக்கள்! | Protest In Batticaloa Srilanka Against Government

நாட்டின் பொருளாதாரம் உறுதி நிலையை அடைந்துள்ளது : செஹான் சேமசிங்க

நாட்டின் பொருளாதாரம் உறுதி நிலையை அடைந்துள்ளது : செஹான் சேமசிங்க

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024