வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி)

Mullaitivu Sarath Weerasekara
By Vanan Jul 11, 2023 08:06 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராக வட மாகாணத்தில் இன்று சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையின் கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா கடந்த வாரம் சென்றிருந்தார்.

நீதிபதியின் வருகைக்கு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இடையூறு விளைவித்ததையடுத்து, நீதிமன்ற விசாரணைகளில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாதென எச்சரித்து அவரை நீதிபதி அங்கிருந்து வெளியேற்றியிருந்தார்.

இதனையடுத்து, தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் சரத் வீரசேகர நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

குருந்தூர் மலையில் இருந்து தம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுவதனால், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணையவேண்டும்' என சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். 

முல்லைத்தீவு

இதன்படி, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் இன்று(11) பணி விலகல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court  

யாழ்ப்பாணம்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம் பணி விலகல் போராட்டத்தை மேற்கொண்டனர்.

யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் தமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court


மட்டக்களப்பு

நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து இன்று மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தலைமையில் இந்த போராட்டமும் கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் உள்ள நீதிவான் நீதிமன்றம்,மாவட்ட நீதிமன்றம், மேல்நீதிமன்றம் ஆகியவற்றின் வழக்குகளில் பங்குகொள்ளாது சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றிலிருந்து பேரணியாக வந்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு குரல்கொடுப்போம், இனவாதத்தை கக்காதே, நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூணாகும், நீதித்துறையில் இனவாதத்தை கக்காதே, நீதித்துறையினை அச்சுறுத்தாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மும்மொழிகளிலுமான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் 

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம்(11) பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணி விலகல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணி விலகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று(11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம்பெறும் போராட்டத்திலும் கலந்துகொள்ள முல்லைத்தீவிற்கு சென்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டது.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

அம்பாறை

அம்பாறை - கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் இன்று(11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பணி விலகல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பல்வேறு கோசங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000