சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்: மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Missing Persons Jaffna Mullaitivu Trincomalee
By Aadhithya Aug 27, 2024 10:41 AM GMT
Report

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச நீதி கோரி மாபெரும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அந்தவகையில், எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த நிகழ்விற்கு ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு (Mullaitivu) ஊடக அமையத்தில் இன்று (27) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் பரிதாபமாக உயிரிழப்பு : இறுதிக் கிரியைகள் இன்று

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் பரிதாபமாக உயிரிழப்பு : இறுதிக் கிரியைகள் இன்று

உறவுகளுக்கான நீதி

அவர் மேலும் கூறுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டு, வீடு வீடாக சென்று இழுத்து செல்லப்பட்டு, மற்றும் தாமாக சரணடைந்த உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு கிழக்கில் பல பிரதேசங்களில் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்: மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு | Protests For Justice On Missing Persons Day

எமது உறவுகளுக்கான நீதி எமக்கு கிடைக்வேண்டும் என்று இரவு பகலாக போரடி வருகின்றோம். இந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவரைக்கும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

ஆனால் நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் பல ஆணைக்குழுக்களை அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.  அவைகள் ஊடாக வலுக்கட்டாயமாக பதிவுகள் மேற்கொண்டும் இதுவரை தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.

ஏ9 வீதியில் கோர விபத்து: இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் பலி

ஏ9 வீதியில் கோர விபத்து: இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் பலி


ஓ.எம்.பி.அலுவலகம்

கடைசியாக ஓ.எம்.பி.அலுவலகம் ஊடாக எங்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோம் என்றும் சொல்லி அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்: மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு | Protests For Justice On Missing Persons Day

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி வருகின்றது. எமது வீதியில் போராடிய தாய்மார்கள், தந்தைமார்கள் இறந்துள்ளார்கள். அதற்கான நீதியும் கிடைக்கவில்லை. சிறுபிள்ளைகளை கையளித்திருந்தோம் அந்த பிள்ளைகளுக்கான நீதியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் (Jaffna) ஆரியகுளம் சந்தியில் இருந்து பாரிய போராட்டம் ஆரம்பிக்கவுள்ளது இதற்காக அனைத்து உறவுகளும் எமக்காக குரல் கொடுக்கவேண்டும்.

நல்லூரில் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான்! களைகட்டிய சூர்யோற்சவம்

நல்லூரில் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான்! களைகட்டிய சூர்யோற்சவம்

வர்த்தக சங்கங்கள்

அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கங்கள் பொது அமைப்புகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுப்பதுடன், கிழக்கில் திருகோணமலையிலும் (Trincomalee) போராட்டம் அதே நாள் நடைபெறுகின்றது. இதற்கான ஆதரவினையும் வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்." என்றார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்: மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு | Protests For Justice On Missing Persons Day

ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவித்த அவர், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இதுவரைக்கும் ஐனாதிபதியாலோ அல்லது அரசியல்வாதிகளாலோ எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இதே நேரத்தில் ஐனாதிபதி தேர்தலை பற்றி எங்களிடம் கேட்டால் வெறுப்புத்தான் உள்ளது எவர் வந்தாலும் அவர்கள் எங்கள் உறவுகளை கடத்திசென்றவர்களையோ, கொலை செய்தவர்களையோ காப்பாற்றுபவர்கள்தான் ஐனாதிபதியாக வருவார்கள். அப்படி முடிந்தால் குற்றம் செய்தவர்களை சர்வதேச கூண்டில் ஏற்றினால் அவர்களை நாங்கள் வரவேற்கின்றோம்.

சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025