சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டம்!

Jaffna Kilinochchi Mannar Mullaitivu Trincomalee
By Shadhu Shanker Sep 21, 2023 03:06 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் 08 மாவட்டங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஏற்பாட்டில் குறித்த போராட்டம்  இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்

இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறை வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று  யாழில் நடாத்தப்பட்டது.

சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டம்! | Protests Have Been Carried Out In 08 Districts

தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை தாக்கிய இனவெறி கும்பலுக்கு விடுதலை!

தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை தாக்கிய இனவெறி கும்பலுக்கு விடுதலை!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐஓஎம் அலுவலகம் முன்பாக  காலை இப் போராட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு வொன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி

தமிழர் தாயகத்தில் தொடரும் காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை முன்னிறுத்தி, அவற்றிற்கான  சர்வதேச விசாரணையை கோரி கிளிநொச்சியில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டம்! | Protests Have Been Carried Out In 08 Districts

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில்  கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கஜேந்திரன் எம்பியை தாக்கிய இனவெறி கும்பல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கஜேந்திரன் எம்பியை தாக்கிய இனவெறி கும்பல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முல்லைத்தீவு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டம்! | Protests Have Been Carried Out In 08 Districts

இதன் போது வடக்கு கிழக்கு தமிழர்தாயகத்தில் தீர்வின்றி தொடரும் பிரச்சனைகளை உள்ளடக்கி,  சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்!(படங்கள்)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்!(படங்கள்)

திருகோணமலை

சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டம்! | Protests Have Been Carried Out In 08 Districts

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மன்னார்

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்களுக்கான உண்மைகளை கண்டறிதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்துதல், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் குடிசார் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா இரட்டை கொலை விவகாரம் மேலும் மூவருக்கு பகிரங்க பிடியாணை!

வவுனியா இரட்டை கொலை விவகாரம் மேலும் மூவருக்கு பகிரங்க பிடியாணை!

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025