மாகாண சபை முறை ஒழிப்பு சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா : சபா குகதாஸ் கேள்வி

Sri Lanka Sri lanka election 2024
By Raghav Dec 03, 2024 12:20 PM GMT
Report

மாகாணசபை முறை ஒழிப்பு என்பது சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இன்றையதினம் (03.12.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்லின மத கலாசாரம் கொண்ட நாடுகளில் அரசியல் அமைதியை உறுதி செய்த அரசியல் அமைப்பு சமஸ்டிப் பண்புகளை கொண்டதாகவே இருக்கின்றது.

தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

அபிவிருத்தி அடைந்த நாடு

அதனால் அந் நாடுகள் உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறியதுடன் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய  பரிணாமங்களையும் பெற்றுள்ளன.

மாகாண சபை முறை ஒழிப்பு சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா : சபா குகதாஸ் கேள்வி | Provincial Council System Sri Lanka

பல்லினங்களின் உரிமைகளையும் அவர்களது அடிப்படை அபிலாசைகளையும் மதிக்கின்ற சட்டங்களையும் இனங்களுக்கு இடையேயான சுயமரியாதை மற்றும் சகோதரத்துவம் பேணப்படுவதற்கும் உலகில் வெற்றி கண்ட அரசியல் அமைப்பு சமஸ்டி ஆகும்.

இத்தகைய சிறந்த பண்புகளை கொண்ட கட்டமைப்பாக மாற்றக் கூடிய திருத்தமே தற்போது நடைமுறையில் உள்ள மாகாணசபை திருத்த சட்டம் இதனை கடந்த கால ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி அதனை அரசியல் இனவாதமாக பயன்படுத்தியதன் அறுவடையே நாட்டின் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவு.

வவுனியாவில் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல்: பேருந்து நிலையத்தில் அமைதியின்மை

வவுனியாவில் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல்: பேருந்து நிலையத்தில் அமைதியின்மை

மாகாணசபை முறை

இவற்றை எல்லாம் உற்று நோக்கி கடந்தகால வரலாற்றை ஒரு சிறந்த பாடமாக புதிய ஆட்சியாளர்கள் சிந்தித்தால் இன்று மாகாணசபை முறையை ஒழிக்க வேண்டும் என அறிக்கை விட்டிருக்க மாட்டார்கள்.

மாகாண சபை முறை ஒழிப்பு சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா : சபா குகதாஸ் கேள்வி | Provincial Council System Sri Lanka

அநுர அரசின் இத்தகைய அறிக்கைகள் தென்னிலங்கையின் தோல்வி கண்ட கடும் போக்காளர்களை திருப்திப்படுத்தவும் பிராந்திய வல்லரசை எதிர்க்கும் பூகோள வல்லரசை சந்தோஷப்படுத்தவும் கடந்த கால ஆட்சியாளர்களை விட தங்களின் மோசமான இனவாத போக்கையும் சூசகமாக காட்டியுள்ளது.

மாகாணசபை முறையை ஒழித்து சமத்துவ அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் என்பது சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளின் அரசியல் ஆட்சியை அடி ஒற்றிய பயணமா?அல்லது தற்போது இருக்கின்ற ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்திய சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா? அல்லது சிறிய தேசிய இனங்களின் அபிலாசைகளை சிதைத்து அவர்களின் குரலை சட்டரீதியாக அடக்கும் நோக்கமா? இவ்வாறான எண்ணங்கள் ஆட்சியாளரிடம் இருக்குமாயின் கடந்தகால ஆட்சியாளரின் பதவி ஆயுட்காலத்தை விட குறுகியதாக அநுர அரசின் பயணம் அமைந்து விடும்.

மாகாண சபை இரத்து செய்யப்படுமா..! சபையில் அநுர அரசிடம் சாணக்கியன் கேள்வி

மாகாண சபை இரத்து செய்யப்படுமா..! சபையில் அநுர அரசிடம் சாணக்கியன் கேள்வி

சமஷ்டி அரசியல்

மத்திய அரசிற்கும் மாகாணசபைக்குமான அதிகாரங்களை அர்த்தமுள்ளதாக பகிர்ந்து பாதுகாப்பான சமஷ்டி அரசியல் அமைப்பின் மூலமே நாட்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்க முடியும் அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியும் இல்லா விட்டால் மீண்டும் கடந் கால ஆட்சியை போன்று நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கும்.

மாகாண சபை முறை ஒழிப்பு சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா : சபா குகதாஸ் கேள்வி | Provincial Council System Sri Lanka

சர்வதேச நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளை தந்திரோபாயமாக கையாள வேண்டும் பிராந்திய, பூகோள நாடுகளின் முரண்பட்ட நிலை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கூர்மையடையுமாயின் கடந்த காலங்களை போன்ற பலவீனமான நிலையே தொடரும் ஆரோக்கியமான பயணத்தை கேள்விக்குள்ளாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன்

இனப்பிரச்சினை குறித்து எதுவுமே பேசாத அநுர : நாடாளுமன்றில் சிறீதரன் விசனம்

இனப்பிரச்சினை குறித்து எதுவுமே பேசாத அநுர : நாடாளுமன்றில் சிறீதரன் விசனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025