தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

Anura Kumara Dissanayaka Douglas Devananda Sri Lanka
By Harrish Dec 03, 2024 11:50 AM GMT
Report

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கான முயற்சி தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas devananda) வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுக்கு டக்ளஸ் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது.

நாளை இரவு வரை நாடாளுமன்றத்தை நடந்த தீர்மானம்

நாளை இரவு வரை நாடாளுமன்றத்தை நடந்த தீர்மானம்

தமிழ் மக்களுக்கான தீர்வு

மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை ஈ.பி.டி பி. கட்சியினாராகி நாமும் கடந்த 35 வருடங்ளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம்.

கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொணாடிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம் | 13Th Amendment Law Letter From Douglas To Anura

குறிப்பாக 2010 - 2015 காலப் பகுதியிலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் அங்கமாக நாம் இருந்தபோதிலும், ஆளும் தரப்பில் அப்போதிருந்த தென்னிலங்கையை சேர்ந்த முற்போக்காளர்களான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்திய நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

மாவீரர்நாள் நினைவேந்தல் கைதுகள் - பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

மாவீரர்நாள் நினைவேந்தல் கைதுகள் - பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

புதிய அரசியலமைப்பு

அண்மையில் சிநேகபூர்வமாக உங்களை சந்தித்த வேளையிலும், 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும், அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமான பொறிமுறையாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அத்துடன், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நிலையில், அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம் | 13Th Amendment Law Letter From Douglas To Anura

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே, உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டின் அடிப்படையிலும், தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்" என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

ஒருதலைப்பட்சமாக செயற்பட வேண்டாம்! ரில்வின் சில்வாவுக்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன்

ஒருதலைப்பட்சமாக செயற்பட வேண்டாம்! ரில்வின் சில்வாவுக்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சேமமடு, ஓமந்தை

15 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி

12 Feb, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

15 Feb, 2025
மரண அறிவித்தல்

Sangarathai, ஆனைக்கோட்டை, கொழும்பு, Whitby, Canada

13 Feb, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada

14 Feb, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Toronto, Canada

13 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, கோப்பாய்

14 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

22 Feb, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, மண்டைதீவு

15 Feb, 2015
மரண அறிவித்தல்

Manippay, உயிலங்குளம், Anna Paulowna, Netherlands

08 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Oslo, Norway

08 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada

16 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி வடக்கு, உசன், கனடா, Canada

14 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வட்டகச்சி, கிளிநொச்சி

13 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு

15 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, கரவெட்டி கிழக்கு, Dartford, United Kingdom

08 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Toronto, Canada

09 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, மன்னார், நயினாதீவு, Luzern, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கைதடி, கந்தர்மடம், யாழ்ப்பாணம், Melbourne, Australia

07 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
அகாலமரணம்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025