அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! துல்லியமாக கண்காணிக்கப்பட்டுள்ள இராணுவ நகர்வுகள்
சீனாவுக்கு சொந்தமான ஒரு செயற்கைக்கோள் தரவு நிறுவனம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை விண்வெளியில் இருந்து கண்காணித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மிசார்விஷன் என்ற ஷாங்காய் நிறுவனமே உயர் தரத்திலான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு, அமெரிக்க போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடற்படை நகர்வுகள் குறித்த விவரங்களுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளது.
விமான தளங்கள்
இந்த படங்களில், ஒவ்டா விமானப்படை தளத்தில் இருந்த F-22 stealth போர் விமானங்கள் மற்றும் பிரின்ஸ் சுல்தான் விமான தளம், அல் உதீத் விமான தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இயக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Image Credit: MizarVision
மேலும், உலகின் மிகப்பெரிய அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford இன் இயக்கங்களும் செயற்கைக்கோள் படங்களில் கண்காணிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சீனாவின் பெரிய செயற்கைக்கோள் வலையமைப்பு மூலம் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இது தற்போதைய ஈரான் போரில் முக்கியமான புலனாய்வு அம்சமாக பார்க்கப்படுவதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: MizarVision
ஈரானின் தாக்குதல்
எனினும், ஈரான் தனது தாக்குதல்களை வழிநடத்த இந்தப் படங்களைப் பயன்படுத்தியதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை வெளியாகவில்லை.

Image Credit: MizarVision
இதேவேளை, இந்த படங்கள் வெளியான சில நாட்களுக்குப் பிறகே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதாக தெரியவருகிறது.

Image Credit: MizarVision
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |