நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு : அமைச்சரவை அனுமதி
Sri Lanka Cabinet
Ministry of justice Sri lanka
Cabinet Decisions
By Jaso
உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளால் நீடிக்க அரசாங்கம் திட்டம்
அதன்படி, தற்போது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகளாக உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகளால் நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |