கோட்டாபயவை சிறையில் போடுங்கள்!! இந்தியாவில் வலுக்கும் எதிர்ப்பலைகள்

india crime war gotabaya velmurukan
By Vanan Oct 18, 2021 10:11 PM GMT
Report

போர்க்குற்றவாளியான இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சிறப்பு விருந்திரனராக அழைத்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் திறப்பு விழாவிற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை இந்திய மத்திய அரசு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் (Velmurukan) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த 2009இல் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச சகோதர்களையும், சிங்கள இராணுவத் தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

சிங்கள பேரினவாத அரசால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்தும் கோரிக்கை எழுப்பி வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒக்டோபர் 20 அன்று, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகருக்கு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கெளதம புத்தர் முத்தி அடைந்ததாக நம்பப்படும் திருத்தலமான குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் திறப்பு விழாவில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்கிறார். அப்போது, அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கையை அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தளத்தில் புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை மத்திய அரசு சிறப்பு விருந்தினராக அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையர் மிச்செல் பச்லெட், கடந்த 2021 ஜனவரி 27 அன்று வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உள்நாட்டு புலனாய்வு விசாரணை வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார்.

ஆனால், தமிழர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையரின் பரிந்துரையையும் பொருட்படுத்தாமல், கோட்டாபய ராஜபக்சவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் மத்திய அரசின் செயல், இனப்படுக்கொலைக்கு துணைபோகும் நடவடிக்கையே ஆகும் - என்றுள்ளது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026