கொலை முயற்சியில் இருந்து தப்பிய புடின் - உக்ரைன் உளவுப்பிரிவு பரபரப்பு தகவல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து அவர் தப்பி விட்டதாகவும் உக்ரைன் இராணுவ உளவுப்பிரிவு தலைவர் பரபரப்பு தகவலொன்றை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், உக்ரைன் இராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறியதாவது:
ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே உள்ள கருங்கடலுக்கும், ரஷ்யாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்ற இடத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி நடந்தது.
பெப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய பின் இந்த முயற்சி நடந்தது. அதில் புடின் மீது தாக்குதல் நடந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
